லீ சியன் லூங்

இருபது ஆண்டுகளாக சிங்கப்பூர்ப் பிரதமராக இருந்துவரும் திரு லீ சியன் லூங், 2024 மே 15ஆம் தேதியன்று அப்பொறுப்பை துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம் ஒப்படைக்கவுள்ளார். தம்முடைய பதவிக்காலத்தின்போது திரு லீ, இந்தியச் சமூகத்திற்குப் பேராதரவாக, பெருந்துணையாக விளங்கி வந்துள்ளது குறித்தும் அவரது நிர்வாகத் திறன், தலைமைத்துவம் குறித்தும் இளையோர் முதல் பெரியோர்வரை பலரும் தங்கள் கருத்துகளைத் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டனர்.
கடந்த 16 ஆண்டுகளாக, தாம் பிரதமர் லீ சியன் லூங்குடன் கலந்துறவாடியபோதெல்லாம், அவரது கவனம் சிங்கப்பூர், சிங்கப்பூரர்கள் மீதுதான் இருந்தது எனப் புரிந்துகொண்டேன் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் (படம்) தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரின் பிரதமராக 20 ஆண்டுகள் சீரிய சேவையாற்றி பொறுப்பை அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைக்கிறார் திரு லீ சியன் லூங். சிங்கப்பூருக்கே உரிய தனித்துவத்துடன் இந்தத் தலைமைத்துவ மாற்றம் இடம்பெறுகிறது. 
பிரதமர் லீ சியன் லூங்கின் பதவிக் காலத்தில் தங்களுக்கு ஆதரவு இருந்துள்ளதைக் காவல்துறை அதிகாரிகள் எப்போதும் உணர்ந்துள்ளனர் என்று காவ்லதுறை துணை ஆணையர் ஹாவ் குவாங் ஹுவீ கூறியுள்ளார்.
பிரதமராக திரு லாரன்ஸ் வோங் பதவி ஏற்றதும் அவரது புதிய அமைச்சரவையில் திரு லீ சியன் லூங் மூத்த அமைச்சராகப் பொறுப்பு வகிப்பார். மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் அதே பொறுப்பில் தொடர்ந்து சேவையாற்றுவார்.